Tuesday, January 18, 2011

இரண்டு நாள் முந்திப் பிறந்தவை.

அடையின் பதினாறாம் நாளில்
சீக்குவந்து செத்துக் கிடக்கும்
கருஞ்செவலைக் கோழியின்
மிச்சமிருக்கும் உடம்புச் சூட்டில்
பொரித்திருக்கும் போல,
புதிதாய் கேட்கிறன
ஏழெட்டுக் குரல்கள்.

கரப்பானுக்கும், கள்ளப்பிராந்துக்கும்
காப்பந்து காக்க பஞ்சாரம் போதாது.