சுழியம்
வாழ்ந்துகழித்தலும், எழுதிக்கிழித்தலும்
Tuesday, January 18, 2011
இரண்டு நாள் முந்திப் பிறந்தவை.
அடையின் பதினாறாம் நாளில்
சீக்குவந்து செத்துக் கிடக்கும்
கருஞ்செவலைக் கோழியின்
மிச்சமிருக்கும் உடம்புச் சூட்டில்
பொரித்திருக்கும் போல,
புதிதாய் கேட்கிறன
ஏழெட்டுக் குரல்கள்.
கரப்பானுக்கும், கள்ளப்பிராந்துக்கும்
காப்பந்து காக்க பஞ்சாரம் போதாது.
No comments:
Post a Comment
தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.